`இந்திய ரயில்வே துறையின் பாதுகாப்பு உயர்ந்துவிட்டது- பெருமிதம் பேசும் அமைச்சர்

by Rahini A, Apr 17, 2018, 12:10 PM IST

இந்திய ரயில்வே துறையின் பாதுகாப்பு கடந்த ஓராண்டில் பன்மடங்கு உயர்ந்துவிட்டது என்று கூறியுள்ளார் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

இந்திய ரயில்வே துறையின் `63-வது ரயில்வே வாரம்’ மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் கொண்டாடப்பட்டது. இதில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், இந்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய கோயல், `இந்திய ரயில்வே துறை குறித்து நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும். கடந்த ஓராண்டில் மட்டும் ரயில்வே துறையில் பாதுகாப்பு பன்மடங்க உயர்ந்துவிட்டது. இந்தத் துறையில் தொலைக்கப்பட்ட அழகை மீண்டும் கொண்டு வருவோம்.

இன்னும் அதிகமாக உழைத்து, புதிய இலக்குகளை வைத்து மக்களுக்கு சேவை ஆற்றிடுவோம்’ என்று பேசியுள்ளார். உலகின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனம் இந்திய ரயில்வே துறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading `இந்திய ரயில்வே துறையின் பாதுகாப்பு உயர்ந்துவிட்டது- பெருமிதம் பேசும் அமைச்சர் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை