கவர்னர் வீட்டில் அமைச்சர்களுடன் படுத்து உறங்கிய கெஜ்ரிவால்

மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னர் வீட்டில் படுத்து உறங்கி நூதன தர்ணா போராட்டத்தில் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

இதுபோன்ற நலத்திட்டங்களை அமல்படுத்த சம்பந்தப்பட்ட துறை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால், கெஜ்ரிவாலின் உத்தரவை ஐஏஎஸ் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த கெஜ்ரிவால் மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கவர்னர் வீட்டில் அதிரடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கெஜ்ரிவால் அமைச்சர்களுடன் நேற்று இரவு துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார். ஆனால், கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கவர்னர் வீட்டின் வரவேற்பு அறையில் பல மணி நேரம் அமர்ந்திருந்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். பின்னர், அங்குள்ள சோஃபாவிலேயே கால் நீட்டி படுத்து உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, கெஜ்ரிவால் கூறுகையில், “அரசின் திட்டங்களை ஐஏஎஸ் அதிகாரிகள் நிறைவேற்ற மறுக்கின்றனர். சட்டசபையில் டில்லிக்கு மாநில அரசு அந்தஸ்து அளிக்கும் தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் கைப்பாவையாக துணை நிலை கவர்னர் செயல்படுவது சரியல்ல” என தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds