உத்தரகாண்டில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

by Isaivaani, Dec 28, 2017, 21:39 PM IST

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று மாலை 4.47 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால், அச்சம் அடைந்த மக்கள் வீதிக்கு ஓடி வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

You'r reading உத்தரகாண்டில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை