வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ஒரு குரங்கு!

by Rahini A, May 31, 2018, 18:01 PM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரைச் சேர்ந்தவர் சரவ் விஜய் பன்சால். இவர் தன் வியாபாரப் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக தன் மகளுடன் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.

கையில் பணப்பையுடன் ரொக்கத் தொகை 60ஆயிரத்துடன் ’தானா நய் மந்தி ஹல்கா மதன்’ பகுதியிலிருந்து நவிமந்தி பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்தச் சென்றுள்ளார்.

பன்சால் தன் மகள் நான்சியுடன் 60ஆயிரம் ரூபாயை பணப்பையை எடுத்துக்கொண்டு வங்கி வாசலில் சென்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த குரங்கு ஒன்று பன்சால் கையிலிருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு சென்றுள்ளது. இதனால் அலறியபடி பன்சால் தவிக்க பணப்பையை எடுத்துச் சென்று பையைக் கிழித்துப் பார்த்துள்ளது.

தனக்குத் தேவையானது இல்லை என்று அறிந்த குரங்கு பையைக் கிழித்துப்போட்டுவிட்டுச் சென்றது. இதையடுத்து ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்துவிட்டன. முடிந்தவரையில் பணம் அங்கிருந்தோரால் எடுத்துக்கொடுக்கப்பட்டது.

ஆனால், தான் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணம் பறிபோனது என்றும் இதனால் தான் கடனில் கஷ்டப்படப்போவதாகவும் பன்சால் புலம்பி வருகிறார்.

You'r reading வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ஒரு குரங்கு! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை