உலக முதியோர் தினம்-கொண்டாட்டங்கள் தேவையில்லை பாசம் மட்டும் போதும்

மரணம் எல்லோருக்கும் ஒரு நாள் வருவதுதான் இன்றோ நாளையோ, அதனை மறந்து விட்டும் வாழும் மனித மிருகங்களாக மாறிப்போனது மறுக்க முடியாத உண்மை. இறுதி ஊர்வலம் செல்லும் போது அரசனே ஆனாலும் இறங்கி நின்று வழி விட்டு சென்ற சமுகத்தில்தான் நாம் வாழ்ந்தோமா என்று வியப்பாக இருக்கிறது.

தள்ளாடும் வயதில் இருக்கும் முதியவர்களை குழந்தை போல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் தஞ்சையில் நடந்துள்ள சம்பவம் பெரும் அவலத்தை தான் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் நேற்று அதிகாலையில் சாலையோரத்தில் வயதான மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தவரை பார்த்த பொதுமக்கள் கண்டும் காணாததுமாய் நடந்து சென்றுள்ளார்கள், இவ்வாறு சில மணி நேரங்கள் கடந்து போக சமுக ஆர்வலர்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்ததும் சாலையோரத்தில் இறந்துபோன மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்வதற்காக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூன்று சக்கர குப்பை வண்டியோடு வந்தனர். ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். அந்த மூதாட்டியின் பெயர், விலாசம் குறித்த எந்த விபரங்களும் தெரியவில்லை. உலக முதியோர் தினம் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடந்த வேதனையான சம்பவம் இது.

அவர் மூதாட்டி மட்டும் அல்ல பாட்டி, தாய், மாமியாரக இருந்து இருக்க வேண்டியவர். அவர்கள் நலமுடன் இருக்கும் காலத்தில் தனது உழைப்பு மொத்ததையும் பிள்ளைகளுக்காக செலவிட்டு வாழ்க்கையை கடந்தவர்கள் பெற்றோர்களின் துணை பிள்ளைகளுக்கு தேவையில்லை என்னும் போது அவர்கள் சமுகத்தில் தனிவிடுவது மிருகங்களை விட மோசமான செயல்பாடு. பிள்ளைகளுக்கு பேரக்குழந்தைகளுக்கு பணத்தையும் பாசத்தை அள்ளி தந்தவர்களுக்கு இதான் நிலை என்றால் இனி யார் மீதும் பாசம் வைக்க தோன்றுமா? நாம் நாட்டில் வாழ்கிறோமா இல்லை அடித்து தின்னும் காட்டில் வாழ்கிறோமா?

கூட்டுக்குடும்பம் தாய் பாசம் எல்லாம் நீங்கள் ஒரு நிலைக்கு வரும் வரை என்றால் அவர்கள் ஏன் தங்கள் உழைப்பையும் வாழ்க்கையையும் உங்களுக்காக வாழவேண்டும்.

கல்லானே யானாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயில் என்ற பாட்டைப்போல் பணம் இருந்தால் தான் பாசம் என்று ஆகிவிட்ட நிலை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். இனி போலியான கொண்டாட்டங்கள் தேவையில்லை பாசம் மட்டும் போதும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds