ரிஷப் பான்ட்டுக்கென தனி பிளான்... - சிஎஸ்கே கோச் சொல்வது என்ன?

ஐபிஎல்லின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்த தொடரை நம்பிக்கையுடன் துவங்கியுள்ளது டெல்லி கேபிட்டல்ஸ். கடந்த 10 சீசன்களுக்காக கடந்த வந்த தோல்வியை இந்த முறை போக்கடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் அந்த அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக இளம் வீரர் ரிஷப் பான்ட் அதிரடியாக விளையாடினர். மும்பை பந்துவீச்சாளர்களை திணறடித்த அவர் 18 பந்துகளில் அரை சதம் எடுத்ததுடன் கடைசி ஓவர்களில்பான்ட் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளாக விளாசி 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

அவரின் அதிரடியால் தான் மும்பை அணி இமாலய இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. இந்த சீசனில் ரிஷப் பான்ட் அச்சமளிக்கக்கூடிய வீரராக வலம் வருவார் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். அதற்கு அவரது ஃபார்ம் ஒரு காரணமாக கூறப்படுகிறது. டெல்லி அணி அடுத்து சென்னை அணியுடன் விளையாட உள்ளது. இதிலும் சிஎஸ்கே அணிக்கு கடும் பான்ட் அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது குறித்து கவலைப்படப்போவதில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசும்போது, 'பான்ட் டின் சிறப்பான ஆட்டத்துக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். ஆனால், அவர் மீது மட்டுமே கவனம் இருக்காது. டெல்லி அணியில் மற்ற வீரர்களும் உள்ளனர். இந்திய அணியில் இடம்பிடிக்கும் இளம் வீரர்களில் ஒருவராக ரிஷப் பான்ட் இருக்கிறார். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. டெல்லி அணியில் தவான், இங்கிராம், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற மற்ற சிறப்பான வீரர்களும் உள்ளனர். அவர்களின் தவறுகளை கண்டுபிடித்து, அதை சிறப்பாக பயன்படுத்த வேண்டும். எங்கள் கவனம் முழுவதும் எங்கள் பலத்தின் மீது மட்டுமே" எனக் கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds