வீழ்ந்தது இந்தியக் கிரிக்கெட் அணி- தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து

Jul 18, 2018, 12:11 PM IST

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி மாஸ் காட்டியது. முதல் ஒருநாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆனால், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாய்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இதையடுத்து 3 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரையும் கைப்பற்றும் என்ற நிலை இருந்தது. நேற்று லீட்ஸில் நடந்த போட்டிக்கான டாஸை இங்கிலாந்து கேப்டன் மோர்கன் வெற்றி பெற்றார். அவர் இந்தியாவை பேட்டிங் ஆடச் சொல்லி அழைத்தார். இதையடுத்து வலுவான பேட்டிங் கொண்ட இந்திய அணி களமிறங்கியது. ரோகித் ஷர்மா, 2 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேற தவான் 44 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

இதையடுத்து, அணியை நிலைப்படுத்தும் நோக்கில் விளையாடிய கோலி 72 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 21 ரன்களுக்கு வெளியேற, தோனி 42 ரன்கள் குவித்தார். ஆனால், எந்த பேட்ஸ்மேனும் நிலையாக நின்று ஆடாததால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் வின்ஸ் மற்றும் பேர்ஸ்டோ முறையே 27 மற்றும் 30 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு களம் கண்ட ரூட் மற்றும் மோர்கன் கடைசி வரை விக்கெட் இழக்காமல் முறையே 100 மற்றும் 88 ரன்கள் அடித்தனர். இதனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இங்கிலாந்து, 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 44.3 ஓவர்களில் கடந்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை இங்கிலாந்து வெற்றி பெற்று, தொடரையும் 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

You'r reading வீழ்ந்தது இந்தியக் கிரிக்கெட் அணி- தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை