திருநங்கையை போன்று வேடமிட்ட கிரிக்கெட் வீரர் கம்பீர்!

திருநங்கையை போன்று வேடமிட்ட கிரிக்கெட் வீரர்

Sep 15, 2018, 14:09 PM IST

திருநங்கைககள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர் கலந்து கொண்டதோடு அவர்களைப் போல் உடை அணிந்து, மரியாதை செலுத்திய விதம் அனைவரையும் வியப்படைய செய்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பிளேயராக இருந்தவர் கம்பீர். பல சாதனைகளைப் புரிந்த இவர் சமூக பிரச்னை பலவற்றிற்கும் குரல் கொடுத்து வந்துள்ளார். நாட்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளையும், நலத்திட்டங்களையும் செய்து வருகின்றார்.

இந்நிலையில், திருநங்கைகள் மட்டும் பங்கேற்கும் 'ஹித்ரா ஹப்பா'  என்னும் விழா டெல்லியில் நடைப்பெற்றது. இதில் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சி திருநங்கைகளிடையே நடைப்பெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக கௌதம் கம்பீர் அழைக்கப்பட்டார்.

அவர்களின் அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு சென்ற கம்பீர், பெண் வேடத்தில் சென்று அங்கிருந்த திருநங்கைகளை உற்சாகப்படுத்தினார். அங்கிருந்த திருநங்கைகள் கம்பீருக்கு ராக்கி கட்டினர்.

இதுகுறித்து பேசிய கம்பீர் ‘ஆண் அல்லது பெண்ணாக இருப்பது விஷயமல்ல. மனித நேயம் மிக்க மனிதர்களாக இருப்பது தான் முக்கியம் என தெரிவித்திருக்கிறார். கம்பீரின் இந்த மனித நேய செயல் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

You'r reading திருநங்கையை போன்று வேடமிட்ட கிரிக்கெட் வீரர் கம்பீர்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை