சிட்னி டெஸ்டில் ஆஸி. அணி பாலோ ஆன் - வெற்றிப்யாதையில் இந்தியா !

India in success way in Sydney test match

by Nagaraj, Jan 6, 2019, 11:18 AM IST

சிட்னி டெஸ்டில் ஆஸி. அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் பெற்றது. முதல் இன்னிங்சில் 322 ரன்கள் பின் தங்கியுள்ள ஆஸி.அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா ? என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 - வது மற்றும் கடைசிப் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸி.அணி 3-ம் நாளான நேற்று தேநீர் இடைவேளைக்குப் பின் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து தத்தளித்த போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

நான்காவது இன்றும் மழையால் போட்டி தாமதமாகி, உணவு இடைவேளைக்குப் பின் தொடங்கியது. 236 ரன்களுடன் மேற்கொண்டு 64 ரன்கள் சேர்ப்ப்தற்குள் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியத் தரப்பில் சுழலில் மாயாஜாலம் காட்டிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜா, சமி தலா 2 விக்கெட்டுகளையும் பும் ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனால் 322 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடி வருகிறது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா ?ஆள்திரேலியா என்ற நிலை உள்ளது. இந்த டெஸ்டில் வென்று தொடரை 3 - 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றும் பட்சத்தில் இரு அணிகளுக்கு இடையிலான 71 ஆண்டு கால டெஸ்ட் சரித்திரத்தில் முதல்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றிய சாதனை படைக்க உள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading சிட்னி டெஸ்டில் ஆஸி. அணி பாலோ ஆன் - வெற்றிப்யாதையில் இந்தியா ! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை