குழந்தையை மீட்கும் முயற்சி தொடரும்.. வருவாய் ஆணையர் பேட்டி..

ஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி ஆகியோரின் 2 வயது குழந்தை சுர்ஜித்வில்சன் கடந்த 25ம் தேதி மாலையில் வீட்டுக்கு வெளியே உள்ள நிலத்தில் உள்ள விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 4வது நாளாக நடைபெற்று வருகிறது.

எனினும், கடினமான பாறை, ரிக் இயந்திரத்தில் பழுது, மழை போன்ற காரணங்களால், குழந்தையை மீட்க முடியுமா என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அந்த இடத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், ஆள்துளை கிணறு அருகே 2வது குழி தோண்டும் இடத்தில் கனமான பாறைகள் உள்ளன. இதனால், குழி தோண்டும் பணி மிகவும் சவாலாக உள்ளது. அதே சமயம், குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

பாறைக்கு அடியில் கரிசல் மண் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, குழிதோண்டும் பணி தொடர்ந்து நடைபெறும். இது வரை 40 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. 98 அடி வரை குழி தோண்டப்படும். இப்பணியை முடிக்க இன்னும் 12 மணி நேரமாகும். குழந்தை சுர்ஜித் 88 அடியில்தான் உள்ளது.

குழந்தையை தொடர்ந்து கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம். தவறான நம்பிக்கையை அளிக்கக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம். அதே சமயம், எக்காரணம் கொண்டும் மீட்கும் முயற்சி பாதியிலேயே கைவிடப்படாது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறும்என்று தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
trichy-university-assistant-professor-appointment-notice-canceled-high-court-order
திருச்சி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமன அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
high-court-urges-implementation-of-anti-land-grab-law-in-tamil-nadu-before-elections
தமிழகத்தில் தேர்தலுக்கு முன் நில அபகரிப்பு தடை சட்டம் நிறைவேற்ற உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
tn-govt-job-latest-notification
திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு... தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்..!
trichy-gov-job-notification
திருச்சியில் வேலைவாய்ப்பு...செப்டம்பர் 18 கடைசி தேதி...!
nia-arrested-2-persons-in-trichi-whom-had-links-with-al-qaeda
அல்கொய்தாவுடன் தொடர்பு.. திருச்சியில் 2 பேர் கைது.. என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை
radhakrishnan-explained-child-sujith-death-situation
மீட்கப்பட்ட சுஜித் உடலை வெளியே காட்டாதது ஏன்? வருவாய் நிர்வாக ஆணையர் பதில்..
mk-stalin-charged-admk-government-on-the-lapses-in-child-rescue-operations
சுஜித்தை மீட்க முடியாதது ஏன்? அரசின் குறைபாடுகளை பட்டியலிடும் ஸ்டாலின்..
actor-raghava-lawrence-ready-to-adopt-child-for-sujeeth-mother
ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜீத் ஞாபகார்த்தமாக  தத்து குழந்தை... தாய்க்கு, ராகாவா லாரன்ஸ் ஆறுதல்...
tamilfilm-industry-emotional-farewell-to-sujith
ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தைக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி.. வைரமுத்து, விமல், விவேக் கண்ணீர்...
Tag Clouds