தலைப்பை படித்தவுடன் அப்படியா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். சினிமா பணிகளிலிருந்து அடுத்த 3 மாதத்துக்கு முற்றிலுமாக ஓய்வு எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ள தகவல்தான் இது.
![Prithviraj.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2019/12/12122019blobid1576126939793.jpg)
இதுபற்றி அவர் கூறும்போது,'படப்பிடிப்பு தளத்திலிருந்து திரும்பிவிட்டேன். கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு பொய் சொல்ல தெரியாது. அடுத்த 3 மாதத்துக்கு சினிமாவிலிருந்து நான் முழுமையாக ஓய்வு எடுக்க உள்ளேன். இதுவொரு இடைவெளி. தினம்தினம் படப்பிடிப்பு செல்லும் எண்ணத்திலேயே இருந்து வந்தேன். ஆம் இந்த இடைவெளிக்கு எனக்கு ஒரு உடற்பயிற்சி போன்றதாக அமையும்.
எனக்கு மிகவும் பிடித்த ஆடுஜீவிதம் படத்திற்காக இந்த ஓய்வு எனக்கு தேவைப்படுகிறது. ஆனால் அடுத்த 3 மாதமும் படப்பிடிப்புக்கான பணிகளில் மட்டுமே இருக்க மாட்டேன். நான் சந்தோஷமாக இருக்கிறோனா இல்லையா என்பது தெரியாது. பழைய நினைவுகளையும், தொலை தூரங்களையும் இதில் அலசிப்பார்ப்பேன்' என்றார்.