தாய் சம்மதத்துடன் பணத்திற்காக பச்சிளங் குழந்தையை விற்ற 3 பெண்கள் கைது
3 women arrested for selling infant with the consent of the mother for money
தாய் சம்மதத்துடன் பணத்திற்காக பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த செவிலியர் உதவியாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, கொளவான் கரை செல்லிப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரேமா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரேமாவிற்கு உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த சில மண நேரத்திலேயே வெங்கடாசலபுரம் கிராம சுகாதார செவிலியரின் உதவியாளர் சுசீலாதேவி மற்றும் வெள்ளையம்மாள் ஆகியோர் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் காலனி அமுதசுரபி நகரை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் சகுந்தலா தம்பதிக்கு விற்பனை செய்துள்ளனர். இதில், குழந்தையின் தாய் பிரேமா மற்றும் சுரேஷ் ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குழந்தை விற்பனை செய்தது குறித்து திருச்சி குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த தியாகராஜன் சுசீலாதேவி, வெள்ளையம்மாள், சுப்பிரமணி, சகுந்தலா மற்றும் சுரேஷ், பிரேமா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உப்பியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, முசிறி போலீஸ் துணை சுப்பிரண்டு சீத்தாராமன், தியாகரான் உள்ளிட்டோர் கீரம்பூர் காலனி அமுதசுரபி நகருக்கு உடனடியாக சென்று சகுந்தலாவிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.
மேலும், சகுந்தலா, சுசீலாதேவி மற்றும் வெள்ளையம்மாள் ஆகியோரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
You'r reading தாய் சம்மதத்துடன் பணத்திற்காக பச்சிளங் குழந்தையை விற்ற 3 பெண்கள் கைது Originally posted on The Subeditor Tamil
More District news News