பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை!

by Loganathan, Feb 1, 2021, 09:52 AM IST

ஆவின் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு), டெக்னீசியன் (ஆய்வகம்) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு), டெக்னீசியன்(ஆய்வகம்)

மொத்த பணியிடங்கள்: 6

இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு) – 01

டெக்னீசியன்(ஆய்வகம்) – 05

கல்வி தகுதி:

இளநிலை செயற்பணியாளர்:

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ், ஆங்கிலத்தில் higher and lower தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

டெக்னீசியன்:

10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு / அரசு ஒப்புதல் அளித்த நிறுவனங்களில் லேப் டெக்னீசியனில் 2 ஆண்டு டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு) – ரூ.19,500-62,000/-

டெக்னீசியன்(ஆய்வகம்) – ரூ.19,500-62,000/-

கட்டணம்:

OC/BC/MBC/DNC - ரூ.250/-

SC/SCA/ST - ரூ.100/-

கட்டணம் செலுத்துவதற்கு உண்டான விபரங்கள் மற்றும் எழுத்து தேர்வு விபரங்கள் விண்ணப்ப படிவத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை:

இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு) – எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

டெக்னீசியன்(ஆய்வகம்) – கல்வி தகுதி மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 10.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:
பொது மேலாளர்,
கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்,
பச்சாபாளையம்,
காளம்பாளையம்(அஞ்சல்),
கோவை-641 010. மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/Notifications-MPCS-rec.pdf

You'r reading பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை