பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

by Loganathan, Feb 8, 2021, 20:10 PM IST

மத்திய அரசின் தேர்வாணையமான SSC லிருந்து காலியாக உள்ள Multitasking Staff (Non Technical) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 21.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கான இணையான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் முடித்து இருக்க வேண்டும்.

ஊதியம்: வருமான அலகு-1 Rs. 5200-20200 மற்றும் கிரேடு பே ரூ.1800.

வயது: 18 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02-01-1996 க்கு முன்னர் பிறந்திருக்கக் கூடாது மற்றும் 01-01-2003 க்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.

18 முதல் 27 வயது உள்ளவர்களில் 02-01-1994 பிறகும், 01-01-2003 க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவினருக்கு ரூ.100 மற்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இணையத்தின் மூலம் 21.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/notice_mts_05022021.pdf

You'r reading பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை