கிராமப்புற இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!

by Loganathan, Feb 10, 2021, 20:15 PM IST

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையிலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 14.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 12

கல்வி தகுதி:

அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு தேர்வாணையத்தின் 5(2)(a) விதிப்படி தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.15700 – 50000/-

வயது: 01.01.2020 அன்று, 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Online மூலம் 14.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்...

https://tnrd.gov.in/project/oa_form/rd_sec_office_assistant_application_form.php

https://tamil.thesubeditor.com/media/2021/02/Download_Notification_and_Instruction.pdf

You'r reading கிராமப்புற இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை