பினராயி விஜயனுக்கு கேரள பூ வியாபாரிகள் கடும் கண்டனம்

தற்போது உலகம் முழுவதும் கொரோனா காலமாக இருந்தபோதிலும் கேரளாவில் மட்டும் 'ஓணக் காலம்' தொடங்கிவிட்டது. இன்று முதல் 10 நாட்கள் மலையாளிகள் தங்களது வீடுகள் முன்பு பூக்கோலம் இட்டு மாவேலி மன்னனை வரவேற்க இப்போதே தயாராகி வருகின்றனர். இன்றிலிருந்து 10வது நாளான ஆகஸ்ட் 31ஆம் தேதி பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், தற்போது கொரோனா காலமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பூக்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூக்களை பயன்படுத்தினால் அதன் மூலம் பரவ வாய்ப்புண்டு. எனவே வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூக்களை பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் என்று கூறினார். பினராயி விஜயனின் இந்த கருத்து தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓணம் பண்டிகையை நம்பித்தான் தமிழ்நாட்டிலுள்ள தோவாளை, ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பூ விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். பினராயி விஜயனின் இந்த அதிரடி கருத்தால் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள பூ விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கேரளாவில் உள்ள பூ வியாபாரிகள் பினராயி விஜயனின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து கேரளாவை சேர்ந்த சில பூ வியாபாரிகள் கூறியது: தமிழ்நாட்டில் இருந்து தான் காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் உள்பட பெரும்பாலான பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு வரப்படுகிறது. அவை அனைத்தும் எந்த இடையூறும் இல்லாமல் கேரளாவுக்கு வருகிறது. ஆனால் தமிழ்நாடு உட்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூக்களால் மட்டும் கொரோனா பரவ வாய்ப்பு உண்டு என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வெளிமாநிலங்களில் இருந்து பூக்களுடன் வரும் லாரிகள் அனைத்தும் கேரள எல்லையில் கிருமி நாசினி தெளித்த பின்னர் தான் கேரளாவுக்குள் அனுமதிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அங்கிருந்து வரும் பூக்களால் எந்த காரணம் கொண்டும் கொரோனா பரவ வாய்ப்பில்லை. எனவே முதல்வர் தனது முடிவை வாபஸ் பெற வேண்டும். அவரது கருத்தால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். திருமண சீசனுக்கு அடுத்தபடியாக ஓணம் பண்டிகை காலத்தில் தான் எங்களுக்கு நல்ல வியாபாரம் நடைபெறும். தற்போது இதிலும் சிக்கல் ஏற்பட்டு விட்டது என்று கூறுகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :