போராட்டம் எதிரொலி: ஐபிஎல் போட்டி இனி சென்னையில் நடைபெறாது ?

சென்னையில் நேற்று நடைபெற்ற கடும் போராட்டத்திற்கு எதிரொலியாக இனி சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறாது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், ஐபிஎல் போட்டி நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று சென்னை அண்ணாசாலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதை அடுத்து போராட்டக்காரர்களை களைக்க தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. மேலும், இது தொடர்பாக 500க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த போராட்டத்தையும் மீறி நேற்று இரவு 8 மணிக்கு ஐபிஎல் போட்டி தொடங்கியது. இதற்கிடையே, கிரிக்கெட் வீரர்களை அவர்கள் தங்கியிருந்த ஓட்டலின் பின் வாசலில் இருந்து இரண்டு பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக சேப்பாக்கம் மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

போட்டி விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், ஸ்டேடியத்திற்கு வந்திருந்த போராட்டக்காரர்கள் பலர் டார்ச் லைட் எரிய வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சிலர் தாங்கள் அணிந்திருந்த செருப்பை வீசி எறிந்தனர். இதனால், நேற்று மிகுந்த பரபரப்புடன் ஐபிஎல் போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்றைய போட்டியின்போது ஏற்பட்ட பிரச்னைகள், வீரர்கள் பாதுகாப்பு, வருமானம் குறைவு உள்ளிட்ட அம்சங்களை கணக்கில் கொண்டு இனிவரும் போட்டிகள் சென்னையில் நடத்தப்படாது என ஐபிஎல் போட்டி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னைக்கு பதிலாக, திருவனந்தபுரம் அல்லது புனே ஆகிய மைதானங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds