1 கோடி வாக்குகள் டார்கெட்- அத்தனை பூத்துகளிலும் 5 பேர் நியமனம்... தடாலடி தினகரன்

Dinakaran appoints Loksabha Election Booth Level Agents

Feb 2, 2019, 14:45 PM IST

லோக்சபா தேர்தலையொட்டி, அனைத்து பூத்துகளிலும் நிர்வாகிகளையும் நியமித்துவிட்டார் டிடிவி.தினகரன். ஒவ்வொரு பூத்திலும் இருக்கும் 5 பேர், 30 வாக்குகளைக் கொண்டு வர வேண்டுமாம். அப்படிச் செய்துவிட்டாலே ஒரு கோடி வாக்குகள் வந்து சேரும்.

வாக்காளர்களை அமமுகவை நோக்கித் திருப்பும் வகையில் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சில அறிவுரைகளைக் கூறியிருக்கிறார் தினகரன்.

இதைப் பற்றிப் பேசிய அவர், தேர்தல் களத்தில் நமக்கும் ஸ்டாலினுக்கும்தான் நேரடி போட்டி. எடப்பாடி எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் கையில் இருக்கும் அதிகாரம் கீழே விழப் போகிறது.

உளவியல்ரீதியாக அதிமுகவினரைப் பலவீனப்படுத்தும் வேலைகளைச் செய்யுங்கள். ஒரு கோடி வாக்குகள் வந்து சேர்ந்துவிட்டாலே, நாம்தான் பெரிய சக்தியாக இருப்போம் எனப் பேசியிருக்கிறாராம்.

-அருள் திலீபன்

You'r reading 1 கோடி வாக்குகள் டார்கெட்- அத்தனை பூத்துகளிலும் 5 பேர் நியமனம்... தடாலடி தினகரன் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை