14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்…

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களக்காடு பகுதியில் களக்காடு போலீசார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 5 இளைஞர்கள் நின்றுள்ளனர். போலீசார் வருவதை கண்டு அவர்கள் அங்கிருந்து ஓட முயன்றுள்ளனர்.

போலீசார் துரத்தி சென்று அவர்களை பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் 5 நாட்டு வெடிகுண்டுகள், 4 அரிவாள்கள் இருந்துள்ளன.

உடனே அவர்களை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் களக்காடு மற்றும் பணகுடி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த முத்துமனோ, மாதவன், சந்திரசேகர், அருள் துரை சிங் என்ற கண்ணன் 17 வயதுடைய பணகுடியைச் சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.

களக்காடு பகுதியை சேர்ந்த ஒரு 10 ஆம் வகுப்பு மாணவன், அந்த பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்துள்ளார். இதற்கு மாணவியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காதலை விடும்படி, அந்த மாணவனை பலமுறை எச்சரித்து உள்ளனர். ஆனாலும் அந்த மாணவர் அடிக்கடி மாணவியை பின் தொடர்ந்து பேசி வந்துள்ளான். இதனால் மாணவியின் உறவினர்கள் அந்த மாணவனை கொலை செய்ய முடிவு செய்து, இதற்காக களக்காடு பெத்தானியா பகுதியை சேர்ந்த 23 வயதேயான அருள்துரை சிங் என்ற கண்ணனிடம் பணம் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவரது நண்பர்களான 4 பேரும் அந்த மாணவனை தீர்த்து கட்ட வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்களுடன் சென்ற போதுதான் கையும்களவுமாக போலீசில் சிக்கி உள்ளனர்.

இதையடுத்து கொலை செய்ய அனுப்பிய நபர் மற்றும் நாட்டு வெடிகுண்டை தயாரித்த கொடுத்தவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காதலுக்காக 10 ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோந்து சென்று குற்றம் நிகழாமல் தடுத்த களக்காடு போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
7-people-surrender-in-priest-murder-case-in-nellai-sudalaimada-swamy-temple-crime
நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண்
kalakkad-near-country-bombs-5-people-arrest
14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்…
welcome-poster-for-sasikala-nellai-aiadmk-executive-terminated
சசிகலாவை வரவேற்று போஸ்டர்: நெல்லை அதிமுக நிர்வாகி நீக்கம்
heavy-rains-in-nellai-district-floods-in-tamiraparani
நெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணியில் வெள்ளம் மணிமுத்தாறு அணை திறப்பு
king-s-visit-to-recover-buried-temple-impressive-near-nellai
மண்ணுக்குள் புதைந்த கோவிலை மீட்க மன்னர் வருகை: நெல்லை அருகே சுவாரசியம்
crop-grazing-fence-police-stole-bike
பயிரை மேய்ந்தது வேலியாம்.. பைக்கை திருடியது போலீசாம்..
corporation-expropriates-land-family-struggles-over-water-tank-in-nellai
நிலத்தை அபகரித்து மாநகராட்சி : நெல்லையில் வாட்டர் டேங்க் மீதேறி குடும்பமே போராட்டம்
a-loving-couple-who-sold-their-baby-because-of-poverty
வறுமையின் காரணமாக குழந்தையை விற்ற காதல் தம்பதியர்
selfie-on-top-of-a-train-engine-the-boy-who-died-in-nellai
ரயில் எஞ்ஜின் மேல் செல்ஃபி: நெல்லையில் உயிரிழந்த சிறுவன்
nellai-smart-city-plan-to-uproot-120-trees-and-plant-elsewhere
நெல்லை ஸ்மார்ட் சிட்டி : 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நட திட்டம்
Tag Clouds

READ MORE ABOUT :