பொன்னமராவதி ஆடியோ விவகாரம்: வதந்தியை பரப்பிய நபர் கைது

பொன்னமராவதி ஆடியோ விவகாரம் தொடர்பாக வதந்தியை பரப்பிய குகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்கள் சமூககத்தை மாற்று சமூகத்தை சோ்ந்த சிலர் இழிவாக பேசி ஆடியோ வெளியிட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதேசமயம் அந்த அவதூறு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்த சூழ்நிலையில், காவல்துறையினர் அந்த ஆடியோவை வெளியிட்ட நபரை கைது செய்யவில்லை என்று கூறி காவல்துறை வாகனங்கள் மற்றும் பொது மக்களின் வாகனங்களை சிலர் அடித்து நொறுக்கினர். மேலும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் மரங்களை வெட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பொன்னமராவதி உள்பட 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலவரம் கட்டுக்குள் வந்ததையடுத்து நேற்று 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

அவதூறு ஆடியோவில் உள்ள நபரை கைது செய்ய கலிபோர்னியாவில் உள்ள வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் உதவியையும் புதுக்கோட்டை போலீசார் நாடியுள்ளனர். இந்த சமயத்தில் சமூக வலைதளத்தில் ஒரு குறிப்பிட்ட நபரின் புகை படத்துடன், இந்த நபர் தான் முதல் ஆடியோவை பகிர்ந்தவர், ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக ஆடியோவை வெளியிட்ட நபர் இவர் தான், இதை அதிக அளவில் பகிருங்கள் என்ற பதிவானது தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

அந்த பதிவு வேகமாக பரவியது. அந்த படத்தில் இருந்த தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த ஐயாசாமி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், என் படத்துடன் தவறான பதிவை பரப்பி வருகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த வதந்தியை கொத்தமங்கலம் செல்வராஜ் என்பவர் மகன் குகன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் பரப்பி வருவதாக குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் குகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னமராவதியில் கலவரம்; 1000பேர் மீது வழக்குப் பதிவு

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
chennai-businesswoman-reeta-lankalingam-commits-suicide
சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை?
Army-officer-shot-dead-by-army-man-in-Chennai-military-quarters
சென்னையில் பயங்கரம் : ராணுவ ஹவில்தாரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த வீரர்
boxer-swims-2.5-km-in-flood-water-to-attend-event-and-finally-wins-silver-medal
தலைக்கு மேல் வெள்ளம்... 2.5 கி.மீ. எதிர் நீச்சல்.. குத்துச்சண்டையில் பதக்கம்.. இளம் வீரரின் துணிச்சல்
Mettur-dam-will-be-opened-tomorrow-for-delta-irrigation
மேட்டூர் அணை நாளை திறப்பு ; தமிழக அரசு உத்தரவு
3-lakhs-cusecs-water-release-in-cauvery-river-Mettur-dam-level-increased
மேட்டூர் அணை ஒரே நாளில் 15 அடி உயர்வு; கர்நாடக அணைகளில் நீர் திறப்பு திடீர் நிறுத்தம்
Mumbai-hotel-charged-their-guest-Rs-1700-for-2-boiled-eggs
இரண்டு அவிச்ச முட்டை விலை 1700 ரூபாயாம்: மும்பை ஓட்டலில்தான்...
Groom-murder-to-his-father
கல்யாண மொய் பிரிப்பதில் தகராறு..! தந்தையை அடித்துக்கொன்ற புதுமாப்பிள்ளை
Rowdy-vallarasu-killed-police-encounter-at-Chennai-Madhavaram
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை
Hindu-Religious-and-Charitable-Endowments-Department-conduct-a-study-in-sathuragiri-temple
உணவு கிடைக்கவில்லை எனப் புகார் - சதுரகிரியில் ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகள்
3-persons-arrested-for-jewelery-worth-Rs-11-crore-robbery-in-toll-gate
சுங்க சாவடியில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது
Tag Clouds