தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை - வானிலை மையம்
Rain alert 3 days Tamilnadu meteorlogical center
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 24 மணிநேரத்தில், கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை தொடரும். ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே, மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கேட்டுக்கொண்டார்.
You'r reading தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை - வானிலை மையம் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News
READ MORE ABOUT :