May 6, 2020, 09:36 AM IST
தமிழகத்தில் இது வரை 4058 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 33 பேர் பலியாகியுள்ளனர். 1485 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள்.தமிழகம் முழுவதும் நேற்றும்(மே 5) 508 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4058 ஆக உயர்ந்துள்ளது. Read More
May 6, 2020, 09:31 AM IST
அரிசி பெறும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜூன் மாதமும் இலவசப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். Read More
May 5, 2020, 17:00 PM IST
நாம் ஆலோசனைகளைச் சொன்னால் அரசுக்குக் கோபம் வருகிறது. ஆனால், சிறு விஷயங்களில் கூட அக்கறையும் சிந்தனைத்திறனும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார் Read More
May 5, 2020, 16:47 PM IST
சென்னையில் கொரோனா பரப்பும் மையமாக மாறி விட்ட கோயம்பேடு காய்கனி மார்க்கெட் அடைக்கப்பட்டது. தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
May 5, 2020, 13:33 PM IST
சென்னை மாநகர் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை மறுநாள்(மே7) திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு கடந்த 4ம் தேதி ஊரடங்கை நீட்டித்த போதிலும், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. Read More
May 5, 2020, 13:04 PM IST
டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாளை மறுநாள்(மே7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. எனினும், பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
May 5, 2020, 12:46 PM IST
தமிழகத்தில் நேற்று(மே4) ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 266 பேருக்கு நோய் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பரவியிருக்கும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் நோய்ப் பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. Read More
May 4, 2020, 14:20 PM IST
திமுகவின் ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தின் பகுதியாக, மகாராஷ்டிராவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் காணொலிக் காட்சி ஆலோசனை நடத்தினேன். அவர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறார்கள் என்பது தெரிந்தது. Read More
May 4, 2020, 13:03 PM IST
கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்ற தொழிலாளர்கள் மூலம் அங்கு கொரோனா பரவியுள்ளது.தமிழகத்தில் நேற்று மாலை வரை 3023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. Read More
May 4, 2020, 12:53 PM IST
சென்னையில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதையடுத்து, 750 திருமண மண்டபங்களில் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் நேற்று மாலை வரை 3023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More