கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு!

by Loganathan, Jan 6, 2021, 14:29 PM IST

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையிலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர்

மொத்த பணியிடங்கள்: 3

கல்வி தகுதி:

அலுவலக உதவியாளர்:
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

இரவுக்காவலர்:
எழுத, படிக்க & மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

ஈப்பு ஓட்டுநர்:
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய அரசுச் சட்டம்59/1988)-ன்படி கீழான தகுதியுடைய அலுவலரால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

அலுவலக உதவியாளர் – ரூ.15,700/- (15700-50000)

இரவுக்காவலர் – ரூ.15,700/- (15700-50000)

ஈப்பு ஓட்டுநர் – ரூ.19,500/- (19500-62000)

விண்ணப்பிக்க: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 25.01.2021க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.

முகவரி:
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
அருப்புக்கோட்டை.

You'r reading கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை