தோனி மீது வழக்கு பதிவு செய்ய முடிவு!
ஆன்லைனில் ஆடைகள் செல்போன் சாப்பாடு ஆர்டர் வாங்குவது போல மாத்திரை மருந்துகளுக்கும் ஆன்லைன் விற்பனையைக் கொண்டு வர நிறுவனங்கள் முயற்சி செய்கிறது. மத்திய அரசும் இதற்கு ஆதரவான முயற்சிகளில் இறங்கியது.
நாடு முழுதும் மருந்து வணிகர்களின் எதிர்ப்பின் காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் விற்பனையை அமல்படுத்துவதற்காக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது.
மத்திய அரசு முழுமையாக அனுமதி வழங்காத போதும் சில நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையை துவங்கியது. மேலும் தள்ளுபடி என கவர்ச்சிகரமான வாசகங்களின் மூலம் மக்களை ஈர்த்து வருகின்றன.
இதை பிரபலப்படுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கொண்டு விளம்பரம் தயாரித்துள்ளது. ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் விளம்பரம் டிவி-க்களில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள், `தோனி நடித்த விளம்பரம் தொடர்பாக அரசுக்கு புகார் அளித்துள்ளோம். அவர் மீது வழக்கு தொடர ஆலோசனை செய்து வருகிறோம். விளம்பத்தில் நடிக்கும் முன் அனுமதி பெறப்பட்ட நிறுவனமா?, பொதுமக்களுக்கு சாதகமானதா' என தெரிந்துகொள்ள வேண்டும் " என்றார்.
You'r reading தோனி மீது வழக்கு பதிவு செய்ய முடிவு! Originally posted on The Subeditor Tamil
More India News