சிலிண்டரை வெடிக்க வைத்து வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன உளைச்சலில் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து மனைவி, குழந்தைகளுடன், கணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராமூர்த்தி. இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு அட்சயா என்ற 6 வயதில் மகள் உள்ளார். ராமூர்த்தி அதே பகுதியில் பிஸ்கட் மற்றும் சாக்லெட் ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், ராமூர்த்திக்கு கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், வீட்டு வாடகை கூட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக, ராமூர்த்திக்கும் அவரது மனைவி காஞ்சனாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மன உளைச்சலுடன் காணப்பட்ட ராமூர்த்தி இன்று அதிகாலை 3 மணியளவில் கேஸ் சிலிண்டரை படுக்கை அறைக்கு எடுத்து வந்துள்ளார். பின்னர், கேஸ் சிலிண்டரை முழுவதும் திறந்துவிட்டு அதனை பற்ற வைத்துள்ளார். இதில், கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில், காஞ்சனா மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமூர்த்தி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
You'r reading சிலிண்டரை வெடிக்க வைத்து வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை Originally posted on The Subeditor Tamil
More Crime News