சிறுமியை காதலிப்பது போல் ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் தலைமறைவு!

காஞ்சிபுரம் அருகே சிறுமியை காதலிப்பது போல் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கற்பமாக்கிய சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Apr 6, 2018, 12:36 PM IST

காஞ்சிபுரம் அருகே சிறுமியை காதலிப்பது போல் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கற்பமாக்கிய சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் சுந்தரம். கூலி தொழிலாளியான இவருக்கு ஷர்மிளா என்ற பதின்ம வயது மகள் உள்ளார். ஷர்மிளா, கடந்த ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாமல், வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த 4 மாதத்துக்கு முன்பாக அப்பகுதிக்கு மதுராந்தகம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ராம் என்பவர், மரம் வெட்டும் வேலைக்கு வந்துள்ளார். பின்னர், அந்த கிராமத்திலேயே தங்கியுள்ளான். கூலித்தொழிலாளிகளான ஷர்மிளா பெற்றோர்கள் காலை சென்றால் மாலை வீடு திரும்புவது வழக்கம்.

இதனால், ஷர்மிளா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஷர்மிளாவுக்கு, அப்பகுதியில் தங்கியிருந்த ராமுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர்.

மேலும், ஷர்மிளா திருமணம் செய்வதாக கூறி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். இந்நிலையில், திடீரென்று சில நாட்களுக்கு முன் ஷர்மிளா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் ஷர்மிளாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது, ஷர்மிளா கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த ஷர்மிளாவின் பெற்றோர் நடந்தது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது ராம் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷர்மிளாவின் பெற்றோர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ராம் தலைமறைவாகியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சிறுமியை காதலிப்பது போல் ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் தலைமறைவு! Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை