சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் நிகழ்ச்சி

சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் நிகழ்ச்சி

by Rajkumar, Sep 16, 2018, 13:11 PM IST
சென்னை பெசன்ட் நகரில், உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 
அதன் பின்னர், அவர் பேசுகையில், "அகில இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது" என்றார். இந்நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் மருத்துவ கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You'r reading சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் நிகழ்ச்சி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை