மத்திய மாநில அரசுகள் தாய் பிள்ளையாய் உள்ளனர்- அமைச்சர் உதயகுமார்

Jul 12, 2018, 15:06 PM IST

மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு தாய் பிள்ளை உறவாக உள்ளது என தமிழக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாஜக-வின் தேசிய தலைவர் அமித் ஷா பேச, அதற்கு ஹெச்.ராஜா மொழிபெயர்க்க என தமிழக அரசியலும் தேசிய அரசியலும் பரபரத்தன. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவு நிலையையும், தேசிய தலைவர் அமித் ஷா-வின் பேச்சுக்கு விளக்கமும் அளித்துள்ளார் தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

அமைச்சர் உதயகுமார் பேசுகையில், "தமிழகத்தில் எது மலர வேண்டும் மக்கள்தான் முடிவு செய்வார்கள். எந்த மாநிலம் சென்றாலும் ஊழலை ஒழிப்போம் என்று கூறும் பாஜக தமிழகத்திலும் அதை கூறியுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி அதிமுக அரசின் ஓராண்டு சாதனை குறித்து பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.

You'r reading மத்திய மாநில அரசுகள் தாய் பிள்ளையாய் உள்ளனர்- அமைச்சர் உதயகுமார் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை