கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்குகிறார் ராகவா லாரன்ஸ்

Aug 23, 2018, 16:04 PM IST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர்.

கேரள மாநிலத்திற்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவிற்கு கடும் சேதமடைந்துள்ளது. மத்திய அரசு ரூ.600 கோடி நிதி வழங்கிய நிலையில், பிற மாநிலங்களும் கேரள மாநிலத்திற்கு உதவி வருகின்றன. உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளும் நிதி வழங்கி வருகின்றன.

இவர்களை தவிர, முன்னணி நடிகர்களும், திரைப்பட பிரபலங்களும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்றும் இந்த தொகையை வரும் 25ம் தேதி அன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்குகிறார் ராகவா லாரன்ஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை