சுற்றுச்சூழல் - வருமுன் காக்க

Jun 26, 2017, 00:10 AM IST

சுற்றுச்சூழல் - வருமுன் காக்க

மனித இனம் மட்டுமன்றி உயிரினங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலை சார்ந்தே உயிர் வாழ்கின்றன. இயற்கை தந்த செல்வம் சுற்றுச்சூழல். உயிரினங்கள் அனைத்திற்கும் இயற்கை தான் கடவுள். மனிதனும் சுற்றுச்சூழலும் பிரிக்க முடியாத இரட்டையர்கள். சுற்றுச்சூழல் பாதித்தால் மனித  இனம் கூண்டோடு அழிவது திண்ணம். மனிதன் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதனவாக விளங்கும் காற்று, நீர், வெப்பம், ஆகாயம், பூமியின் கூறுகள் வாழ்வோடு வாழ்வாக இயற்கை அளித்துள்ளது. அது தான் சுற்றுப்புற சூழல். அது பாதிக்கப்பட்டால் நீரிலிருந்து கரையில் தூக்கி போட்ட மீன் போல் மனித இனம் அழிந்து விடும்.

இந்தியாவில் 17 மாநிலங்களில் 200 மாவட்டங்களில் 90 மில்லியன் மக்கள் (9 கோடி மக்கள்) நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதால் பற்கள், எலும்புகள் நோய்கள் ஏற்படும் அபாய கட்டத்தில் உள்ளனர்.

காற்று மற்றும் நீர் மாசு அடைவதால் மக்கள் அடையும் துயருக்கு ஏணி வைத்தாற்போல் எங்கு நோக்கினும் குப்பை கூளங்கள். அதன் மூலம் எலிகள் ,கொசுக்களின் தொல்லைகள், நோய்கள் எங்கு நோக்கினும் டெங்கு ஜுரம் பன்றி காய்ச்சல்.

தெருவை சுத்தப்படுத்த சென்னை மாநகராட்சி செலவிடும் செலவினம். 200 வார்டுகளில் குப்பைகளைச் சேகரிக்க சென்னை மாநகராட்சி ஒவ்வொரு வருடமும் 400கோடி ரூபாய் செலவிடுகிறது.

You'r reading சுற்றுச்சூழல் - வருமுன் காக்க Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை