தனியார் கல்லூரியின் பெண் ஊழியர்கள் தற்கொலை முயற்சி..?

by Manjula, Sep 20, 2018, 14:51 PM IST

 

பணி நிரந்தரம் கோரி அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் பெண் ஊழியர்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லூரி உள்ளது. சுயநிதி பிரிவில் 9 ஆண்டுக்கு மேலாக தனலட்சுமி, மகாதேவி, கலைச்செல்வி, சுகஸ்கலா, விஜயகுமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், சமீபத்தில் பணியில் சேர்ந்தவர்களை கல்லூரி செயலர் பணி நிரந்தரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து கடந்த 17ம் தேதி முதல் தனலட்சுமி, மகாதேவி, கலைச்செல்வி, விஜயகுமார் ஆகியோர் கல்லூரி முன்பு தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் அழைக்காததால் மனமுடைந்த ஊழியர்கள் 4 பேரும், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக அறிவித்து கல்லூரி மாடிக்கு சென்றனர்.

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நிர்மலாதேவி பணிபுரிந்தது இந்த கல்லூரி என்னது குறிப்பிடதக்கது.

You'r reading தனியார் கல்லூரியின் பெண் ஊழியர்கள் தற்கொலை முயற்சி..? Originally posted on The Subeditor Tamil

More Local news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை