வாஜ்பாயையே தோற்கடிச்சோம்.. மோடி எம்மாத்திரம் – வேட்பு மனுத் தாக்கலுக்கு பிறகு சோனியா காந்தி பரபரப்பு பேட்டி!
Sonia Gandhi filed her nomination at Rae Bareli
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 20 மாநிலங்களில் முதல் கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மே 6ம் தேதி நடைபெறவுள்ள 5ம் கட்ட தேர்தலில் தான் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்குத் தேர்தல் நடக்கிறது.
வேட்பு மனுத் தாக்கல் செய்வதை முன்னிட்டு, ரேபரேலியில் காங்கிரஸ் சார்பில் பிரம்மாண்ட பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூஜையில் சோனியா காந்தியின் மகனும் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர்.
பின்னர் மக்களிடையே ஊர்வலமாக வந்த சோனியா காந்தி, தனது வேட்புமனுவை சற்று முன் தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டு திரும்பிய சோனியா காந்தியிடம் பத்திரிகை நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “2004-ம் ஆண்டை பாஜக மறந்து விட வேண்டாம். பெரும் செல்வாக்கு உடையவரான வாஜ்பாயையே தோற்கடித்தோம்.. மோடியை இந்த முறை நிச்சயம் தோற்கடிப்போம்” என பாஜகவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துச் சென்றார்.
You'r reading வாஜ்பாயையே தோற்கடிச்சோம்.. மோடி எம்மாத்திரம் – வேட்பு மனுத் தாக்கலுக்கு பிறகு சோனியா காந்தி பரபரப்பு பேட்டி! Originally posted on The Subeditor Tamil
More Politics News