மூன்று குழந்தைகளின் தந்தையை கொன்ற தாய்

Mother who killed the father of three children

by SAM ASIR, Oct 22, 2018, 22:18 PM IST

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இண்டியானாபொலிஸ் நகரத்தில் தனது மூன்று குழந்தைகளுக்குமான தந்தையை தாய் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இண்டியானாபொலிஸ் உள்ள உயிரியல் காட்சி சாலையில் உள்ள ஸூரி என்ற பெண் சிங்கம், தன்னுடன் இருந்த நெயாக் என்ற ஆண் சிங்கத்தை கழுத்தில் கடித்து கொன்று விட்டது.

12 வயதாகும் ஸூரி, சான் டியாகோவிலுள்ள உயிரியல் காட்சி சாலையிலிருந்து இண்டியானாபொலிஸ் உயிரியல் காட்சி சாலைக்குக் கொண்டு வரப்பட்டதாகும். 10 வயதாகும் ஆண் சிங்கம் நெயாக்குடன் எட்டு ஆண்டுகள் ஸூரி சேர்ந்து இருந்தது. கடந்த 2015ம் ஆண்டில் ஸூரி, மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

கடந்த வாரம் திங்கள்கிழமை, சிங்கங்களின் கூண்டுக்குள் இருந்து கர்ச்சனை கேட்கவே உயிரியல் சாலையின் ஊழியர்கள் விரைந்து வந்தனர். அப்போது ஸூரி, நெயாக்கின் கழுத்தில் கடித்துக்கொண்டிருந்தது. அவற்றை பிரித்து விடுவதற்கு ஊழியர்கள் எவ்வளவோ முயற்சித்தும், நெயாக்கின் உடல் அசைவு நிற்கும் வரைக்கும் ஸூரி அதன் பிடியை விடவில்லை. நெயாக்கின் உடற்கூறு பரிசோதனையின்படி, கழுத்தில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பார்வையாளர்களை கவரக்கூடிய கம்பீரத்துடன் திகழ்ந்த நெயாக், தன் வாரிசுகளாக மூன்று குட்டிகளை விட்டுச் சென்றுள்ளது.

You'r reading மூன்று குழந்தைகளின் தந்தையை கொன்ற தாய் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை