யோகாசனங்கள்: கர்ப்பப்பை சிறப்படைய கூர்மாசனம்
இக்காலக்கட்த்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பாதிக்கப்படுவது இரத்தசோகை. அதுமட்டுமின்றி பெண்கள் கர்ப்பப்பை கோளாறுகளால் குழந்தையின்மையை அடைகின்றன.
இக்குறைகளைத் தீர்க்க இக்கூர்மாசனத்தை தினமுமம் செய்து பயன் பெறுங்கள்.
செய்முறை
விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், அதாவது பாதங்களை ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும்.
அந்த இடைவெளியில் நெற்றியில் தரையில் பதித்தபடி, இரு கைகளையும் முதுகின் பின்புறமாக (படத்தில் உள்ளபடி) பிடிக்க வேண்டும்.
முதலில் அவ்வாறு பிடிக்க வராது. பின்னர் நன்றாக பழகிய பின்னர் சுலபமாகும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். குனியும்போது முதுகுத் தண்டின் கீழே (நுனி பாகத்தை )யும், நிமிரும்போது புருவ மத்தியிலும் நினைவை செலுத்தவும். மூன்னு முறை இந்த ஆசனத்தை இரண்டு நிமிட இடைவெளி விட்டு செய்யவும்.
- பலன்கள்
இந்த யோகாசனம் செய்வதால் மன அமைதி கிடைக்கும். இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டு எலும்பு, கழுத்தெலும்பு சமந்தப் பட்ட வலி நீங்கும். ரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் குறைந்து குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும்.
You'r reading யோகாசனங்கள்: கர்ப்பப்பை சிறப்படைய கூர்மாசனம் Originally posted on The Subeditor Tamil
More Health News