ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களை வெட்டிப்போட வேண்டும்! பிரபல நடிகர்

women visiting Sabarimala temple should be ripped in half south india actor

Oct 12, 2018, 16:42 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களை வெட்டிப்போட வேண்டும் என மலையாள நடிகர் கொல்லம் துளசி பேசியுள்ளார்.

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அனுமதி வழங்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து வரும் 18ஆம் தேதி முதல் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் முக்கியப பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். பல போரட்டங்களும் நடந்து வருகிறது 

இந்நிலையில் மலையாள நடிகர் கொல்லம் துளசி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அவர்களை பாதியாக வெட்டிப்போட வேண்டும். ஒரு பாதியை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். இன்னொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வீச வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

கொல்லம் துளசியின் இந்த பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

You'r reading ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களை வெட்டிப்போட வேண்டும்! பிரபல நடிகர் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை