தீபிகா படுகோனை முந்திய கங்கனா ரனாவத்! எதில் தெரியுமா?

Hghest-paid heroine in India

Oct 27, 2018, 10:18 AM IST

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நாயகியாக மாறியுள்ளார்.

Kangana Ranaut

பத்மாவத் படத்தில் நடித்த தீபிகா படுகோனே தான் பாலிவுட்டிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக பார்க்கப்பட்டார்.

அந்த படத்திற்காக சுமார் 10 கோடி ரூபாய் தீபிகா பெற்றதாக சொல்லப்படுகிறது. அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா அதிக சம்பளம் வாங்கி வந்தார்.

இந்நிலையில், இந்த இருவரையும் ஒரே படத்தில் ஓவர்டேக் செய்துள்ளார் கங்கனா ரனாவத் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மணிகர்னிகா படத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத்திற்கு 14 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகியாக கங்கனா ரனாவத் உயர்ந்துள்ளார். கோலிவுட்டில் ரிலீசான தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அறிமுகமானவர் கங்கனா ரனாவத், தற்போது இந்தியாவின் ராணியாகவே மாறியுள்ளார்.

You'r reading தீபிகா படுகோனை முந்திய கங்கனா ரனாவத்! எதில் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை