என் கதை சொல்லப்படும் - பத்து பேரைக் கொன்றவன் கொக்கரிப்பு
என் கதை சொல்லப்படும் - அமெரிக்காவில் பத்து பேரைக் கொன்றவன் கொக்கரிப்பு
கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 7:30 மணிக்கு அமெரிக்கா டெக்சாஸில் சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
டிமிட்ரியாஸ் பாகோர்ட்சிஸ் என்ற பதினேழு வயது மாணவன் ஷாட்கன் மற்றும் . 38 ரிவால்வர் வகை துப்பாக்கிகளால் சுட்டதாக கைது செய்யப்பட்டுள்ளான்.
பாகிஸ்தானிய மாணவி சபிகா ஷெய்க் மற்றும் ஓர் ஆசிரியை உட்பட பத்து பேர் பரிதாபமாக பலியாகினர். பத்து பேர் காயமுற்றுள்ளனர். தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 1,400 மாணவ மாணவியர் பள்ளியில் இருந்துள்ளனர்.
தன்னை ‘கடவுள் நம்பிக்கை இல்லாதவன்’ என்று சமூக ஊடகங்களில் அறிவித்துள்ள பாகோர்ட்சிஸ், தன்னைப் பற்றி பிற்காலத்தில் பேசவேண்டும் என்பதற்காகவே சில மாணவர்களை சுடாமல் விட்டு விட்டதாகக் கூறியுள்ளான்.
இந்த ஆண்டு அமெரிக்க பள்ளிகளில் நடந்துள்ள 22-ஆவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading என் கதை சொல்லப்படும் - பத்து பேரைக் கொன்றவன் கொக்கரிப்பு Originally posted on The Subeditor Tamil
More World News