பாகிஸ்தான் உளவு பிரிவான ஐஎஸ்ஐக்கு புதிய தலைவர்
Pakistan
பாகிஸ்தானின் அதிகாரம் மிக்க உளவு பிரிவான ஐஎஸ்ஐக்கு புதிய தலைவராக லெப்டினண்ட் ஜெனரல் அசிம் முனிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவ நுண்ணறிவு பிரிவின் தலைவராக இருந்தவர் அசிம் முனிர். சமீபத்தில்தான் அவர் இராணுவ படையின் தலைவர் ஜெனரல் குவாமர் ஜாவேத் பாஜ்வாவால் லெப்டினண்ட் ஜெனரலாக உயர்த்தப்பட்டார். வட பிராந்தியத்தின் படை தளபதியாக பணிபுரிந்த அனுபவம் கொண்ட முனிருக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் பெருமை மிக்க ஹிலால் இ இமிடஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐக்கு 2016 டிசம்பர் முதல் தலைவராக இருந்து வரும் லெப்டினண்ட் ஜெனரல் ஜாவேத் முக்தருக்கு பதிலாக அசிம் முனிர் இந்த அதிகாரமிக்க பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் ஐந்து மேஜர் ஜெனரல்கள் பதவி உயர்வு பெற்ற பின்னர், பல முக்கிய பொறுப்புகளுக்கான மாற்றங்கள் பாகிஸ்தான் இராணுவத்தில் செய்யப்பட்டுள்ளன. அதில் அசிம் முனிரின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
You'r reading பாகிஸ்தான் உளவு பிரிவான ஐஎஸ்ஐக்கு புதிய தலைவர் Originally posted on The Subeditor Tamil
More World News