நடிப்புக்கு முழுக்கு போடும் பிரபல நடிகை.. பட வாய்ப்பில்லாததால் எமி போல் விரக்தி..
என்னமோ ஏதோ, தலைவன், கரையோரம், நாரதன், மார்க்கெட் ராஜா போன்ற படங்களில் நடித்திருப்பவர் நிகிஷா பட்டேல். தலைவன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானாலும் அவருக்குத் தொடர்ச்சியாக ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கவர்ச்சி ஆட்டங்கள் ஆடவே நிகிதாவை அழைத்தனர். இந்தியில் பட வாய்ப்புகளைப் பெறலாம் என்று சென்றவருக்கு அங்கு ஏமாற்றமே மிஞ்சியது. தெலுங்கு, கன்னட படங்களிலும் இதேநிலை நீடித்ததால் தென்னிந்தியப் படங்களுக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறாராம்.
நிகிஷா லண்டனில் பிறந்தவர். அங்கு மாடலாகவும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் பவன் கல்யாண் தெலுங்கில் நடித்த புலி படம் மூலம் அறிமுகமானார். தற்போதைக்கு ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே கைவசம் இருப்பதால் அதை முடித்துக்கொடுத்துவிட்டு மீண்டும் லண்டன் சென்று செட்டிலாக முடிவு செய்திருக்கிறார். அங்குச் சென்று டிவி மற்றும் திரைப்படங்களில் நடிக்க முடிவுசெய்திருக்கும் நிகிஷா நிரந்தரமாகவே அங்கேயே தங்கவும் முடிவு செய்திருக்கிறார்.
ஏற்கனவே நடிகை எமி ஜாக்ஸனுக்கும் இதே நிலை ஏற்பட்டது. கடைசியாக அவர் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்திருந்தார். புதிய படங்களுக்காகக் காத்திருந்து எதுவும் வராத நிலையில் விரக்தி அடைந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு டிவி ஆங்கில சீரியல்களில் நடித்தார். தவிரக் காதலுடன் டேட்டிங் செய்து வந்த எமி திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி குழந்தைக்குத் தாய் ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
You'r reading நடிப்புக்கு முழுக்கு போடும் பிரபல நடிகை.. பட வாய்ப்பில்லாததால் எமி போல் விரக்தி.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News