கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார் –மருத்துவ பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்
coimbatore child murder case medical report released
கோவையில், 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
கோவை மாவட்டம் பன்னிமடையில் உள்ள கஸ்தூரி நாயகன் புதூரை சேர்ந்தவர் சதீஷ். இவரின், மூத்த பெண் குழந்தை திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அருகிலிருந்தவர்கள் சிறுமியை தேடியுள்ளனர். பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இப்படியான நிலையில், நேற்று மாயமான சிறுமியின் உடல் வீட்டின் அருகே இருந்த பள்ளத்தில் கைகள் கட்டப்பட்டு உடல்களில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதனால், கொலையாளியை உடனே பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதோடு, இந்த கொடூரச் செய்தவர் யாராக இருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போக்சா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 10 தனிப்படைகள் அமைத்துத் தனித் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
You'r reading கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார் –மருத்துவ பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் Originally posted on The Subeditor Tamil
More Crime News