மீடியாவால் இதை நிறுத்த முடியும்.... இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்துக்கு மாதவன் சொல்லும் ஐடியா!

actor madhavan talks about palakot attack

by Sasitharan, Feb 27, 2019, 21:57 PM IST

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை இன்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது.

மேலும், விமானப்படை விங் கமாண்டர் அபிந்தன் வர்தமான் என்பவர் தனது பெயர், வயது, பதவி மற்றும் மதம் ஆகியவை தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வீடியோ காட்சியை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதனால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் இந்த விவகாரங்கள் குறித்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகின்றன.

பாகிஸ்தான் இந்தியா நடவடிக்கைகள் குறித்து நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், ``இந்த போர் தீவிரவாததுக்கு எதிராக நடப்பது. இரு நாடுகளுக்கு இடையே நடப்பதல்ல. மீடியாவால் இதை பூதாகரமாக்குவதை நிறுத்த முடியும். நாம் அனைவரும் பொறுப்புடன் அமைதியை நோக்கி பயணிப்போம்' என்று பதிவிட்டுள்ளார். இவரின் கருத்துக்கு பலரும் ஆதரவும் தெரிவித்து வருவதால் அவரது டுவீட் வைரலாகி வருகிறது.

You'r reading மீடியாவால் இதை நிறுத்த முடியும்.... இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்துக்கு மாதவன் சொல்லும் ஐடியா! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை