ரஜினி கதையில் நடிக்கிறார் டைரக்டர் அமீர்.. அரசியல் கதை நாற்காலி..
Director Ameer plays Hero in upcoming tamil film Narkali
இயக்குனர் அமீர் புதிய படமொன்றில் ஹீரோவாக நடிக்கிறார். அரசியல் பின்னணியிலான கதையாக உருவாகும் இப்படத்துக்கு நாற்காலி என பெயரிடப்பட்டிருக்கிறது. வி.இசட்.துரை இயக்குகிறார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் இருட்டு படம் உருவானது. இதில் சுந்தர்.சி. ஹீரோவாக நடித்திருந்தார்.
பருத்தி வீரன், மவுனம் பேசியதே, ராம் படங்களை இயக்கிய அமீர் யோகி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு யுத்தம் செய், நினைத்தது யாரோ, வட சென்னை படங்களிலும் நடித்திருந்தார்.
நாற்காலி படத்தில் ஹீரோவாக நடிக்கும் அமீருக்கு வெற்றிமாறன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாற்காலி பட கதை முதலில் ரஜினிக்காக தயாரிக்கப்பட்டதாக கூறப் பட்டது. தற்போது அந்த கதையில் அமீரே நடிக்கிறார்.
You'r reading ரஜினி கதையில் நடிக்கிறார் டைரக்டர் அமீர்.. அரசியல் கதை நாற்காலி.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News
READ MORE ABOUT :