அதிகார வர்க்கத்தை எதிர்கொள்ள முடியாத குழந்தை ஹீரோ.. பிரகாஷ் ராஜ் வருத்தம்..
Child hero who cannot face the power class:Prakash Raj
நடிகர் சுஷாந்த் சுங் ராஜ்புத் தற்கொலை அதிகார வர்க்கத்தினரை எதிர்கொள்ள முடியாமல் நடந்திருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:என்னைப் பொறுத்தவரை நான் திரையுலகில் நிற்க அதிகார வர்க்கத்தை எதிர்கொண்டு அதையெல்லாம் கடந்து வந்தது தான் காரணம்.
எனக்கு ஏற்பட்ட காயங்கள் என் சதைகளை விட ஆழமானது. ஆனால் குழந்தை சுஷாந்த் சிங்கினால் அதையெல்லாம் தாங்க முடியவில்லை. நாம் அவரை இழந்திருக்கிறோம், மீண்டும் பெற முடியுமா? இதுபோன்ற சூழலில் நிற்கப்போகிறோமா? அல்லது கனவுகளை சாகடிக்கப் போகிறோமா? இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார் பிரகாஷ்ராஜ்.
You'r reading அதிகார வர்க்கத்தை எதிர்கொள்ள முடியாத குழந்தை ஹீரோ.. பிரகாஷ் ராஜ் வருத்தம்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News