நா ஊரும் உருளை-கத்திரி சட்னி..

Feb 10, 2018, 19:22 PM IST

நா ஊரும் உருளை கத்திரி சட்னி எப்படி செய்றதுனு பார்க்கலாமா வாங்க..  

சமைக்க தேவையானவை

கத்திரிக்காய் – 3
உருளைக்கிழங்கு - (சிறியது)
கொத்தமல்லி - கைப்பிடி அளவு
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
பச்சை மிளகாய் - 6 (அல்லது தேவைக்கேற்ப)
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப.

உணவு செய்முறை : உருளை கத்திரி சட்னி

ஸ்டெப் 1:

முதலில் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின்பு வாணலியில் சிறிதளவு எண்ணெயை விட்டு சூடான பிறகு , நறுக்கிய காய்கள் மற்றும் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து வதக்கவும்.

ஸ்டெப் 2:

ஆறிய பிறகு சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்த்தால்... சூடான உருளை-கத்திரி சட்னி தயார்.

You'r reading நா ஊரும் உருளை-கத்திரி சட்னி.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை