பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதியா ?

Jun 8, 2018, 14:07 PM IST

பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்கள் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 5 மாவோயிஸ்ட்களை புனே காவல்துறை கைது செய்தது. அவர்களிடம் இருந்து கடிதம் ஒன்றையும் புனே போலீசார் பறிமுதல் செய்தனர். 

அந்த கடிதத்தில்  "ராஜீவ் காந்தி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட போது கொல்லப்பட்டது போல், பிரதமர் மோடி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கொல்லவும்,  பாஜக அரசு தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும்" குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த கடிதத்தை புனோ காவல்துறையினர், உள்துறை அமைச்சகம்,  உளவுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதியா ? Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை