வேட்பாளரை மாத்துங்க...தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் தொண்டர் - சத்தியமூர்த்தி பவனில் உச்சக்கட்ட பதற்றம்
congress party members protested in sathyamoorthy bhavan
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில், சிவகங்கை தொகுதியைத் தவிர்த்து மற்ற எட்டு தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளூர் தொகுதிக்கு புதிய செயல் தலைவர் ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரை மாற்றக்கோரி,காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
ஜெயக்குமாருக்கு பதிலாக எஸ்சி எஸ்டி பிரிவு மாநில தலைவர், செல்வபெருந்தகையை வேட்பாளராக அறிவிக்கக்கோரி போராட்டம் நடத்தினர். ஜெயக்குமாரை, மாற்றவில்லை எனில் எஸ்சி எஸ்டி பிரிவினர் அனைவரும் தங்கள் பொறுப்புகளிலிருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். அப்போது, அலுவலகத்துக்கு வந்த மாநில தலைவர் அழகிரியின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, உடலில் பெட்ரோல் ஊற்றி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சத்தியமூர்த்தி பவனில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
You'r reading வேட்பாளரை மாத்துங்க...தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் தொண்டர் - சத்தியமூர்த்தி பவனில் உச்சக்கட்ட பதற்றம் Originally posted on The Subeditor Tamil
More Politics News