துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது? ராகுல்காந்தி கேள்வி..
ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பேரணி நடத்தினர். பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்ேகாட் வரை பேரணியாக சென்றனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
அவர்கள், நாட்டு மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது அந்த பேரணிக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அவர் சாலையில் பேரணிக்கு முன்பாக வேகமாக சென்று சிறிது தூரத்தில் இருந்து, பேரணியை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டார். அப்போது அவர், நீங்கள் கேட்ட சுதந்திரம் இதோ என்று கத்தினார். துப்பாக்கிச் சூட்டில் சதாப் பரூக் என்ற இதழியல் துறை முதுகலை பட்ட வகுப்பு மாணவர் படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில், இன்று(ஜன.31) காலை நாடாளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் முன்னாள் தலைவர்் ராகுல்காந்தி, செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவர் யார்? அவருக்கு யார் பணம் கொடுத்தது? என்று கேட்டார். ஏற்கனவே ராகுல்காந்தி, நான் ஒருபோதும் வன்முறையை போதிப்பதில்லை. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. உயிரே போனாலும் தலைவணங்கிச் செல்லுங்கள் என்றுதான் போதிப்பேன் என்று கூறியிருந்தார்.
You'r reading துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது? ராகுல்காந்தி கேள்வி.. Originally posted on The Subeditor Tamil
More India News